​தெஹிவளை மேம்பாலத்திற்கு முன்னால் முற்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளாயின! (2011.02.17)

தெஹிவளை மேம்பாலத்திற்கு முன்னால் முற்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளாயின! (2011.02.17)

கடந்த வியாழக்கிழமை (2011.02.17) இரவு 7.45 மணியளவில் தெஹிவளை மேம்பாலத்தில் இருந்து வந்துகொண்டிருந்த முற்சக்கர வண்டி ஒன்று திடீரென விபத்துக்குள்ளாயின. மேம்பாலம் வழியாக வந்துகொண்டிருந்த முற்சக்கர வண்டி பாதையின் அருகில் உள்ள வீ தி தடைகளை தாண்டும்போது மறுபக்கமாக வந்த இன்னுமொரு முற்சக்கர வண்டியுடன் மோதியதால் இவ்விபத்து ஏற்பட்டது. இம்முற்சக்கர வண்டியில் பயணித்த சாரதி உட்பட இருவருக்கு இலேசான காயம் ஏற்பட்டுள்ளது.  மேலும்  இவ்விபத்து தொடர்பாக தெஹிவலை பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
 

கொழும்பு நீதிமன்றில் கைதிகள் கைகலப்பு



கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று வழக்கொன்றின் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட இருவேறு பாதாள உலகக் கைதிகள் தங்களுக்குள் மோதிக் கொண்டுள்ளதாக நீதிமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் சரத் அம்பேபிட்டியவின் கொலை வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொட்டு நவ்பர் இன்று வழக்கொன்றின் விசாரணைக்காக இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.
அதன்போது அதே நீதிமன்றில் அவருக்கு எதிரான பாதாள உலகக்கும்பலின் உறுப்பினர்கள் சிலரும் வேறொரு வழக்கின் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டிருந்தனர். அவர்கள் பொட்டு நவ்பரைக் கண்டதும் கடும் ஆத்திரம்  கொண்டனர்.
அதனையடுத்து அவர்கள் தங்கள் கை விலங்குகளைக் கழற்றி பொட்டு நவ்பர் மீது அவர்கள் வீசியெறிந்துள்ளனர்.  தாங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க பொட்டு நவ்பர் தான் காரணம் என்றும் அவர்கள் கூச்சலிட்டுள்ளனர்.
அதனையடுத்து தன்னை நீதிமன்றத்துக்கு அழைத்து வந்த சிறை அதிகாரிகளைப் பார்த்து பொட்டு நவ்பர் தன்னைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு சத்தமிட்டுள்ளார். கைதிகள் மத்தியில் மூண்ட மோதல் காரணமாக வழக்குகள் இரண்டும் வேறொரு தினத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டோருக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதியிடம் அமைச்சர் ஹக்கீம் வேண்டுகோள்

கிழக்கு மாகாணத்திலும் பொலநறுவை, அநுராதபுரம், வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவது தொடர்பாகவும் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பயிர்ச் செய்கை இழப்புகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இது தொடர்பாக நீதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது தாம் விடுத்த வேண்டுகோளுக்கு ராஜபக்ஷ நிவாரண நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதாகவும் அடை மழை காரணமாக வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் நெற்பயிர்ச் செய்கைக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளையும் சேதங்களையும் மதிப்பீடு செய்யுமாறு விவசாய அமைச்சரிடம் கேட்டுக் கொள்வதாகவும் அதற்காக உயர்மட்டக் குழுவொன்றை வெள்ளப் பாதிப்புக்குள்ளான பிரதேசங்களுக்கு அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
நிலைமையை நேரில் கண்டறிந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வெள்ளத்தினால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு தாம் ஞாயிறு, திங்கட்கிழமைகளில் செல்லவிருப்பதாகவும் அமைச்சர் ஹக்கீம் மேலும் கூறினார்.
திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் வெள்ள நீர் மட்டம் உயர்வடைந்து கொண்டே செல்வதனால் அங்குள்ள மக்களை இயன்ற வரை விரைவாக திருகோணமலைக்கு கப்பல், வள்ளங்கள் மூலமாக அப்புறப்படுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு திருமலை துறைமுக மாஸ்டர் கப்டன் லக்ஷீ வசந்தவுடன் தொடர்பு கொண்டு அமைச்சர் பணித்துள்ளார்.
சேருவில2 என்ற கப்பலை அதற்குப் பயன்படுத்த முடியும் என கப்டன் வசந்த இணக்கம் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களிலும் பொலனநறுவை, அநுராதபுரம், வவுனியா மாவட்டங்களிலும் பல தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதால் அங்குள்ள மக்கள் அனுபவிக்கும் இன்னல் குறித்தும் இழப்புகள் குறித்தும் தாம் அதிகம் கவலையடைந்துள்ளதாகவும் அதிக கரிசனை கொண்டுள்ளதாகவும் அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

கிழக்கிலங்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரண உதவி

கிழக்கிலங்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரண உதவி

மனித உரிமைகள் பொதுச் சேவை ஸ்தாபனத்தின் கண்டிக்கிளை கிழக்கிலங்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு பல இலட்ச ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்களை கையளித்தது.

மடவளைக் கிராமத்தை மையமாகக் கொண்டு இப் பொருட்கள் சேகரிக்கப்பட்டதாக மேற்படி அமைப்பின் கண்டி மாவட்ட அமைப்பாளர் ஏ.ஹனீப் தெரிவித்தார்.

இக் கையளிப்பு வைபவத்தில் மனித உரிமைகள் பொது சேவை ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் எம்.அஸீம் மற்றும் மௌவி லமீர்ஹாபிஸ், சுல்தான் ட்ரவலர்ஸ் நிறுவனத்தினர் உட்படப் பலரும் கலந்து கொண்டனர்.

வலப்பனையில் மண்சரிவு

வலப்பனையில் மண்சரிவு

வலப்பனை பிரதேச செயலாளர் பிரிவில் சுமார் 20 ஏக்கர் நிலத்தில்; மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பலர் இடம்பெயர்ந்துள்ளனர். வலப்பனை தியனில்ல என்ற இடத்தில் ஏற்பட்டுள்ள இம் மண்சரிவு காரணமாக 60 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் இராகலை சிங்கள மகா வித்தியாலயத்தில் தங்கவைக்கப் பட்டுள்ளனர்.
மண்சரிவு கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ். பண்டார இது பற்றித் தெரிவிக்கையில் மகாவெல, கரண்டியெல்ல, கும்பல்கமுவ முதலான பகுதிகளிலும் மண் சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனால் மகாவெல பகுதியில் 19 குடும்பங்களும் குமால் கமுல பகுதியில் 15 குடும்பங்களும் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளதாக தெரிவித்தார்.

மாத்தளையில் கடும் மழை: அவசரகாலச் சூழ்நிலை பிரகடனம்.

மாத்தளையில் கடும் மழை: அவசரகாலச் சூழ்நிலை பிரகடனம்.


மாத்தளை மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழை காரணமாக அவசரகாலச் சூழ்நிலை பிரகடனம் படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாத்தளை மாவட்டத்தின் தம்புள்ளை, உக்குவெல, ரத்தோட்டை முதலான பகுதிகளில் கடும் மழை காரணமாக அனர்த்தங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் இதனைத் தவிர்ப்பதற்காக அவசரகாலச் சூழ்நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் சட்டவிரோத கட்டிடங்கள் அகற்றப்பட்டன.

கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் சட்டவிரோத கட்டிடங்கள் அகற்றப்பட்டன.

கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் இன்று வீடமைப்பு அதிகார சபையினால் அகற்றப்பட்டன. இதன்போது மாடிக்கட்டிடங்களின் முன்னாள் கட்டப்பட்டிருந்த கட்டிடங்களையும் அகற்றினர்.
எதிர்வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரை முன்னிட்டு கொழும்பு நகரை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் இந்தச் சட்டவிரோத கட்டிடங்கள் அகற்றப்படுவதாக வீடமைப்பு அதிகார சபையின் அதிகாரிகள் இணையத்தளத்துக்குத் தெரிவித்தனர்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Powered by SKY NETWORK