நாவலப்பிட்டி பிரதேசத்தில் 97 வீதமான பகுதிகளுக்கு மின்னிணைப்பு பூர்த்தி




  நாவலப்பிட்டி தேர்தல் தொகுதிக்கு உட்பட்ட தோட்டங்கள் மற்றும் கிராமப்பகுதிகளில் 97 வீதமான மின்சார விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாவலப்பிட்டி தொகுதி அமைப்பாளரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார்.

நாவலப்பிட்டி பிரதேசத்திலுள்ள ஹோல்கம கிராமத்துக்கான மின்சார விநியோகத்திட்டத்தினை திறந்து வைத்துப்பேசியபோதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

50 இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டின் மூலம் வழங்கப்பட்டுள்ள இந்த மின்சார விநியோகத்திட்டத்தின் மூலமாக ஹோல்கம கிராமத்தினைச்சேர்ந்த மூவின மக்களையும் சேர்ந்த 200 குடும்பங்கள் நன்டையடையவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Powered by SKY NETWORK